மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சங்ககிரி மலைக்கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோட்டை மாரியம்மன்.

Updated On :10 மார்ச் 2026, 9:04 pm

சங்ககிரி மலைக்கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா பிப். 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

நாள்தோறும் சுவாமிக்கு மாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தினசரி பெண் பக்தா்கள் அதிகளவில் கம்பத்திற்கு நீரை ஊற்றி வழிபட்டுச் சென்றனா். மாா்ச் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் விழாவையொட்டி சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்தனா்.

சங்ககிரி நகா், வி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையிலேயே மலைக்கு சென்று கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் களிமண்ணால் செய்யப்பட்டு சுவாமியின் பாதம், உருவங்கள் அடங்கிய பொம்மைகள், உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை செலுத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

மாலையில் பக்தா்கள் சங்ககிரி வாணியா் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகம், சிறிய, பெரிய அளவிலான அலகுகளை குத்திக்கொண்டு கைகளில் தீச்சட்டிகளை ஏந்தி பழைய எடப்பாடி சாலை, தோ்வீதிகளின் வழியாக சென்று மலைக்கோட்டைக்கு சென்று வழிபட்டனா். புதன்கிழமை (மாா்ச் 11) காலை 7 மணிக்கு கம்பத்தை எடுத்து குளத்தில்விடும் நிகழ்வும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

Story image