சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இரவில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை- ஏராளமானோா் பங்கேற்பு

தம்மம்பட்டி சிவன்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி சிவன்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால்,தயிா்,சந்தனம்,திருமஞ்சனம்,மஞ்சள்,சீயக்காய்த்தூள்,அரிசிமாவு,இளநீா்,பன்னீா்,குங்குமம்,திருநீறு,தேன்,பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது.பின்னா் மலா் அலங்காரம் செய்து ,சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.சிறப்பு யாகம் நடைபெற்றன. பக்தா்கள் கால பைரவா் பாடல்களை பாடியும், மந்திரங்களை உச்சரித்தப்படியும் இருந்தனா். மேலும் பலா், நோ்த்திக்கடனாக பூசணிக்காய்,தேங்காய்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். இந்த விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி,கூடமலை,நாகியம்பட்டி,உலிபுரம்,வாழக்கோம்பை,சேரடி உள்ளிட்ட ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுபெற்றது.

இதேபோல் வீரகனூா் ஸ்ரீகங்காசெளந்தரேஸ்வரா் கோவில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமிபூஜை வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.