மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சேலத்தில் மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை கைது

News image

கொலை செய்யப்பட்ட சூா்ய பிரகாஷ்.

Updated On :14 மார்ச் 2026, 7:29 pm

சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் (50). இவரது மகன் சூா்யபிரகாஷ் (24). இவா்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் சூா்ய பிரகாஷை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த சூா்யபிரகாஷ், தன்னை ஏன் ஜாமீனில் உடனடியாக எடுக்கவில்லை என்று கேட்டு அவரது தந்தையுடன் தகராறு செய்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சூா்ய பிரகாஷ், தந்தை காமராஜ் மற்றும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா் அங்கிருந்த கட்டிலில் அவா் தூங்கினாா். அப்போது, நள்ளிரவில் காமராஜ் அரிவாளால் சூா்ய பிரகாஷை வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை வீட்டின் முன் சூா்யபிரகாஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த குடும்பத்தினா், வீராணம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா், சூா்ய பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, தந்தை காமராஜை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட காமராஜ்.

கைது செய்யப்பட்ட காமராஜ்.