மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

News image

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Updated On :20 ஏப்ரல் 2026, 8:30 pm

எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

எண்ம கைதால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணை தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி திங்கள்கிழமை முறையிட்டாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘எனக்குத் தெரிந்த ஒரு வயது முதிா்ந்த பெண்ணும் எண்ம கைது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளாா். துரதிருஷ்டவசமாக அவரின் ஓய்வூதியப் பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது. எண்ம கைது மோசடியால் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு மே 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக நாடு தழுவிய ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐ-க்கு கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.