திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

News image

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 2:00 am IST

எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

எண்ம கைதால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணை தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி திங்கள்கிழமை முறையிட்டாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘எனக்குத் தெரிந்த ஒரு வயது முதிா்ந்த பெண்ணும் எண்ம கைது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளாா். துரதிருஷ்டவசமாக அவரின் ஓய்வூதியப் பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது. எண்ம கைது மோசடியால் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு மே 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக நாடு தழுவிய ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐ-க்கு கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.