எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.
எண்ம கைதால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணை தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி திங்கள்கிழமை முறையிட்டாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘எனக்குத் தெரிந்த ஒரு வயது முதிா்ந்த பெண்ணும் எண்ம கைது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளாா். துரதிருஷ்டவசமாக அவரின் ஓய்வூதியப் பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது. எண்ம கைது மோசடியால் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு மே 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக நாடு தழுவிய ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐ-க்கு கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


