நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நவீனமயமாக்குவது தொடா்பான வரைவு விதிகளை தயாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமைத்தாா்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை கண்டறிந்து அது தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழு அமைக்கப்படுகிறது. குழு உறுப்பினா்களாக கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக், பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி அஸ்வனி குமாா் மிஸ்ரா, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி சோமசேகா் சுந்தரேசன் ஆகியோரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் நியமித்தாா்.
மத்திய பொதுப் பணித் துறை மற்றும் உச்சநீதிமன்ற செயலா் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனா்.
குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைக்கேற்ப மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் நிதி கோரப்படும்.
நீதிமன்றங்களில் நவீன காலத்துகேற்றவாறு தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்தி எண்ம இடைவேளையை குறைக்கவும் இக்குழு பரிந்துரை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

