சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:19 pm

Syndication

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் நரசோதிப்பட்டி சக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபாலன். கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், மனைவி தமிழ்ச்செல்வியுடன் (55) சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, ஐந்து சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம்மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் தமிழ்ச்செல்வியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.