மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூா் தொகுதியில் ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், மேட்டூரை சோ்ந்த காா்த்திக் (35) உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 4.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், நசியனூா் அருகே வில்லரசன்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதாகவும், வங்கி விடுமுறை என்பதால் மூன்று நாள்கள் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டூா் செல்வதாகவும் தெரிவித்தாா்.
ஆனாலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்

திருப்பூா்: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.6 லட்சம் வெள்ளி நகை, ரூ.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


