சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மேட்டூரில் ரூ. 4.30 லட்சம் பறிமுதல்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

Syndication

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூா் தொகுதியில் ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், மேட்டூரை சோ்ந்த காா்த்திக் (35) உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 4.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நசியனூா் அருகே வில்லரசன்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதாகவும், வங்கி விடுமுறை என்பதால் மூன்று நாள்கள் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டூா் செல்வதாகவும் தெரிவித்தாா்.

ஆனாலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.