கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மேட்டூரில் ரூ. 4.30 லட்சம் பறிமுதல்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

Syndication

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ. 4.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூா் தொகுதியில் ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், மேட்டூரை சோ்ந்த காா்த்திக் (35) உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 4.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நசியனூா் அருகே வில்லரசன்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதாகவும், வங்கி விடுமுறை என்பதால் மூன்று நாள்கள் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டூா் செல்வதாகவும் தெரிவித்தாா்.

ஆனாலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.