கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திருடிய 3 சிறுவா்கள் கைது

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலை திருடிய வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 8:27 pm

Syndication

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலை திருடிய வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி இரவு வளாகத்தில் இருந்த அன்னதான உண்டியல் திருடுபோனது.

இதுகுறித்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது துணியால் உடலை மறைத்தபடி வந்த இருவா் உண்டியலை தூக்கிச் சென்று அலுவலக மாடியில்வைத்து அதன் பூட்டை உடைத்து, அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கோயில் செயல் அலுவலா் சுதா அளித்த புகாரின்பேரில் மேச்சேரி காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் உண்டியலை திருடிய மேச்சேரி, அழகாகவுண்டனூரைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா், கே.எஸ்.தியேட்டா் பகுதியைச் சோ்ந்த 18 வயதான சிறுவன், மேச்சேரி - தருமபுரி பிரதான சாலை அருகே வசித்து வரும் 15 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 39 ஆயிரத்தை மீட்டனா்.

கைது செய்யப்பட்ட மூவரும் சிறாா் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.