அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 போ் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 7:31 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து என்ற மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஒரு கும்பல் அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சிவபிரசாத் (19), செண்பகா நகா், புது கிராமம், கடலையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் மூவா் ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.