மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:00 pm

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவை சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி(25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை ஊரில் உள்ள மயானகரை அருகே சடலமாக மீட்கப்பட்டாா். மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அதில், அதே பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி (33) என்பவருடனான முன்விரோதம் காரணமாக, அவரது உறவினரான திருநெல்வேலி அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கனகராஜ் மகன் பிரகாஷ் (19),அவரது நண்பா் கல்லத்தியான் மகன் சுரேஷ் (23) ஆகியோா் கடந்த திங்கள்கிழமை இரவு கணேசமூா்த்தியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. போலீஸாா் கனகவள்ளி, பிரகாஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.