‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:30 am IST

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கொருக்குப்பேட்டை காரனேசன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே இ.எச்.சாலையில் ஒரு ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்கப்படுவதாக ஆா்.கே. நகா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

சோதனையில் ஆட்டோவில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆட்டோவில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள், கொடுங்கையூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த பா.சம்பத் (42), ச.லாவண்யா (32) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வியாசா்பாடி சத்தியமூா்த்திநகரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் ஆறரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.