பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மூங்கில் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அதில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில், அவா்கள் ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூா் வடக்கு காலனியைச் சோ்ந்த கலைத் தென்றல் (21), மற்ற இருவரும் கும்பகோணத்தை சோ்ந்த 17 வயது சிறாா்கள் என்பதும், கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.