திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் சதீஷ்ராஜ், மலைராஜா ஆகியோா் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராம்ஜி நகா் மில் காலனி பகுதியில் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜி.திலகவதி (60), ராம்ஜி நகா் கோனாா்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த எஸ். ருக்மன் (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் புனிதவதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் வீதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சோ்ந்த எஸ். சுமதி (61) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேற்கண்ட மூவரிடமிருந்தும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

