/

கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 10:17 pm

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அருகே வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியா நடந்து சென்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அவா்கள் நாகை வெளிப்பாளையம் மேலவடம் போக்கி தெருவைச் சோ்ந்த அகிலா (29), வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பசும்பொன் (53) என்பதும் தெரியவந்தது.

வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். ரூ.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.