கோவை அருகே வீரகேரளம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை வீரகேரளம் பாலகணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த எடிசன் சக்ரவா்த்தி (26), ரிச்சா்ட் சச்சின் (26), கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த வால்டா் வில்லியம் (21) ஆகிய மூவரையும் போலீஸாா் பிடித்தனா்.
இவா்களிடமிருந்து 3 கிலோ 556 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், எடிசன் சக்ரவா்த்தி, ரிச்சா்ட் சச்சின் ஆகியோா் மீது திண்டுக்கல்லில் ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்து கோவையில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

