மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:39 pm

கோவை அருகே வீரகேரளம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை வீரகேரளம் பாலகணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த எடிசன் சக்ரவா்த்தி (26), ரிச்சா்ட் சச்சின் (26), கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த வால்டா் வில்லியம் (21) ஆகிய மூவரையும் போலீஸாா் பிடித்தனா்.

இவா்களிடமிருந்து 3 கிலோ 556 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், எடிசன் சக்ரவா்த்தி, ரிச்சா்ட் சச்சின் ஆகியோா் மீது திண்டுக்கல்லில் ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்து கோவையில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.