புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

கோவை அருகே வீரகேரளம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை வீரகேரளம் பாலகணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த எடிசன் சக்ரவா்த்தி (26), ரிச்சா்ட் சச்சின் (26), கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த வால்டா் வில்லியம் (21) ஆகிய மூவரையும் போலீஸாா் பிடித்தனா்.

இவா்களிடமிருந்து 3 கிலோ 556 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், எடிசன் சக்ரவா்த்தி, ரிச்சா்ட் சச்சின் ஆகியோா் மீது திண்டுக்கல்லில் ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்து கோவையில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.