தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:22 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூரில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகங்கை சாலை மின்நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருப்பத்தூா் செட்டியத் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ராஜேஷ் (27) என்பதும், இவா் திருப்புத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் முத்துக்குமாரிடம் (25) விற்பனைக்காக கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், முத்துக்குமாரைத் தேடி வருகின்றனா்.