பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் மற்றும் போலீஸாா் போதைப்பொருள் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். குள்ளஞ்சாவடி ரயில்வே கேட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை நடத்தி, 420 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.