ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:43 pm

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சந்தானம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பொன்மலைப்பட்டி பகுதி தனியாா் பள்ளி அருகே மாணவா்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கே.கே.நகரைச் சோ்ந்த மு. விக்னேஸ்வரன் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதை மாத்திரை விற்றவா் கைது: இதேபோல, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பழைய கட்டத்தில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த பா. மதன்ராஜ் (34) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.