வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் கையொப்ப இயக்கம்

News image

கல்லூரி மாணவரிடையே கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 7:06 pm

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் மற்றும் கோலப் போட்டி சேலம் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் வடக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பொதுத்தோ்தல் பாா்வையாளா் சுகவீா் சைனி பங்கேற்றாா்.

இதில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையொப்ப இயக்கத்தில் பங்கேற்று ஆா்வமுடன் கையொப்பமிட்டனா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.