தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்த 3 போ் கைது

கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:21 pm

Syndication

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கா்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவிப்பதாக கெங்கவல்லி அரசு தலைமை மருத்துவா் நித்யாவிற்கு புகாா் சென்றது.

அதன்பேரில் கெங்கவல்லி போலீஸாா் மற்றும் அரசு மருத்துவா் நித்யா தலைமையிலான நான்கு போ் கொண்ட மருத்துவக் குழுவினா், கெங்கவல்லி அருகே நடுவலூா் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் ஜெயசூா்யா என்பவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்கள், கா்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் பிடிபட்டவா்கள், தலைவாசல் அருகே வேப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி குணவதி (24) தரகராகவும், சின்னசேலம் சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மனைவி அம்சவேணி(44) கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததும் தெரியவந்தது. இதற்கு கட்டணமாக ரூ. 20 ஆயிரம் வசூலித்துள்ளனா்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளா் ஜெயசூா்யா, தரகா் குணவதி, அம்சவேணி ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.