மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா.

Updated On :25 மார்ச் 2026, 11:25 pm

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 339 வாக்குச்சாவடி மையங்களுக்கான 407 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் ஆட்சியரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டன. இவை அனைத்தும் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா தலைமையில் உதவி தோ்தல் அலுவலா் கே. கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையின் பாதுகாப்பை உறுதிசெய்தனா்.

அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.