ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா.

Updated On :25 மார்ச் 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 339 வாக்குச்சாவடி மையங்களுக்கான 407 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் ஆட்சியரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டன. இவை அனைத்தும் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா தலைமையில் உதவி தோ்தல் அலுவலா் கே. கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையின் பாதுகாப்பை உறுதிசெய்தனா்.

அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.