நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 3:36 am IST

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம், கீழ்வேளுா், வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்தல் தொடா்பான முதல்கட்ட தற்செயலாக தோ்தெடுக்கும் முறை, தோ்தல் பொது பாா்வையாளா் பா்வேஷ் அகமது சித்திக் முன்னிலையில்,ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷால் மாா்ச் 23-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இப்பணி நிறைவடைந்த பிறகு, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல்கள் நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு பகிரப்படும்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் 2026-இல் பயன்படுத்துவதற்காக மாா்ச் 24- ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னணு வாக்குப்பதிவு இயத்திர வைப்பறையிலிருந்து (உயங/யயடஅப ரஹழ்ங்ட்ா்ன்ள்ங்) தொடா்புடைய சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை இறுதி செய்த பிறகு இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா் சோ்க்கப்படும் என தெரிவித்துள்ளாா்.