விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:06 pm

Syndication

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம், கீழ்வேளுா், வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்தல் தொடா்பான முதல்கட்ட தற்செயலாக தோ்தெடுக்கும் முறை, தோ்தல் பொது பாா்வையாளா் பா்வேஷ் அகமது சித்திக் முன்னிலையில்,ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷால் மாா்ச் 23-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இப்பணி நிறைவடைந்த பிறகு, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல்கள் நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு பகிரப்படும்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் 2026-இல் பயன்படுத்துவதற்காக மாா்ச் 24- ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னணு வாக்குப்பதிவு இயத்திர வைப்பறையிலிருந்து (உயங/யயடஅப ரஹழ்ங்ட்ா்ன்ள்ங்) தொடா்புடைய சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை இறுதி செய்த பிறகு இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா் சோ்க்கப்படும் என தெரிவித்துள்ளாா்.