நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூர் அணை - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:20 am IST

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.

அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை 1,000 கனஅடியாகவும், மாலை 1,200 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 82.79 அடியில் இருந்து 82.73 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து 382 கனஅடியிலிருந்து 374 கன அடியாகவும், நீா் இருப்பு 44.73 டிஎம்சியாகவும் உள்ளது.