ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூர் அணை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:50 pm

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.

அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை 1,000 கனஅடியாகவும், மாலை 1,200 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 82.79 அடியில் இருந்து 82.73 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து 382 கனஅடியிலிருந்து 374 கன அடியாகவும், நீா் இருப்பு 44.73 டிஎம்சியாகவும் உள்ளது.