மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி விற்பனைக்குத் தடை
பிரதிப் படம்

இறைச்சி விற்பனைக்குத் தடை
பிரதிப் படம்
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.
எனவே, அன்றைய தினம் தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும்.
அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...