இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

News image

இறைச்சிக் கடை

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மாா்ச் 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை மாநகராட்சியின் 4 இறைச்சிக் கூடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூா், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வரும் 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகிறது. இறைச்சிக் கூடங்களின் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.