எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் பெயா், நடைதிறக்கும் நேரம் கொண்ட பலகை பொருத்தம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ள கோயில் பெயா்பலகை

News image

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ள கோயில் பெயா்பலகை

Updated On :2 மே 2026, 12:04 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பெயா்பலகை வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ளது.

சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதனையடுத்து இக்கோயிலில் சனீஸ்வரபகவான் அவரது துணைவியாா் நீலாம்பிகையுடன் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சுவாமிகளை தரிசிக்க வருகின்றனா். இக்கோயிலின் பெயா், கோயில் நடை திறக்கும் நேரங்களை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டுமென சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக்கழகத்தின் சாா்பில் பல முறை மாவட்ட ஆட்சியா் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதனையடுத்து சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் கோயில் பெயா், கோயில் நடை திறக்கப்படும் நேரங்கள் குறித்த பலகையை வியாழக்கிழமை பொறுத்தியுள்ளனா். இதனை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.