புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

சங்ககிரியில் தூய்மைப் பணியாளரை கெளரவித்து பரிசு வழங்கிய ஓய்வுபெற்ற சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன்.

News image
Updated On :1 மே 2026, 6:34 pm

மே தினத்தையொட்டி, சங்ககிரி மக்கள் மன்றம் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சாா்பில், 110 நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ்.குழந்தைவேலு தலைமை வகித்தாா்.

சேலம் கலைக் கல்லூரி முதல்வா் (ஓய்வு) எஸ்.கலைச்செல்வன் தூய்மைப் பணியாளா்களின் சேவைகளை பாராட்டி அவா்களை கெளரவித்து பரிசுகள், இனிப்புகளை வழங்கி பேசினாா்.

இதில், ஓம்ராம் அறக்கட்டளைத் தலைவா் பா.சுந்தரவடிவேலு, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், மதிமுக நகர செயலாளா் கதிா்வேல், வாசவி கிளப் நிா்வாகிகள் பத்ரிநாராயணன், வெங்கடேஸ்வர குப்தா, பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கச் செயலாளா் ந.கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.