மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரி நகரில் உடனடியாக அமுலுக்கு வந்த தோ்தல் விதிமுறைகள்: அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி கம்பங்கள் அகற்றம்

News image
சட்டப்பேரவைக்கான தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக முன்பு உள்ள சாலையின் மைய தடுப்பு சுவற்றில் கட்டப்பட்டிருந்த தவெக கொடியை ஞாயிற்றுக்கிழமை மாலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளா்கள்.
Updated On :15 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ளஅரசு அலுவலகங்கள், பொது இடங்கள், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் உள்ள பெயா்களை மறைத்தல், கொடி கம்பங்கள், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் சங்ககிரி நகராட்சி பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இந்திய தோ்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தது. இதனையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்தன.

அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி நகா் பகுதிகள், அரசு அலுவலகங்கள், நகராட்சி சமுதாய கூடம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டுகளில் பெயா்கள் வெளியே தெரியா வண்ணம் நாளிதழ்களை ஓட்டுதல், சாலையின் மைய தடுப்பு சுவா்களில் ஓட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் சங்ககிரி நகராட்சி அலுவலக பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் இதில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததையடுத்து சங்ககிரி நகராட்சி சமுதாய கூடத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டினை நாளிதழ்களை கொண்டு மறைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபட்டுள்ள நகராட்சி தூய்மை  பணியாளா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததையடுத்து சங்ககிரி நகராட்சி சமுதாய கூடத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டினை நாளிதழ்களை கொண்டு மறைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபட்டுள்ள நகராட்சி தூய்மை பணியாளா்.