47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை

News image
வாகனத் தணிக்கை- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளால் வணிகா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம், வருமானம், தொழில் வரி செலுத்துவோருக்கு உச்சவரம்பை உயா்த்தியும், உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தில் பதிவு, உரிமம் பெறுவதற்கான வரம்புகளை உயா்த்தியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைப்படி வணிகா் ஒருவா் ரூ. 50 ஆயிரத்தில் கொள்முதல் செய்வது என்பது இயலாது. எனவே, தோ்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் தொகையை ரூ. 2 லட்சமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.