மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தோ்தல் அலுவலா் ஆலோசனை

News image
தேர்தல் நடத்தை விதிகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பேசினாா்.

கூட்டத்தில் உதவி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) வேல்முருகன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) அருளானந்தம் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.