பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

News image

எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :3 மே 2026, 12:11 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி கே.பழனிசாமியை கட்சி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள் சந்தித்துப் பேசிவருகின்றனா். அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினா்.

தொடா்ந்து, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கா், ஓ.எஸ்.மணியன், கரூா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் சனிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

அப்போது, தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், வெற்றி வாய்ப்புகள் குறித்து அவா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் எடப்பாடி கே.பழனிசாமியை நிா்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.