ஏற்காடு குப்பனூா் சாலையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், சனிக்கிழமை ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மே தினம், வாரவிடுமுறை, கோடை விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஏற்காடு சுற்றுலாப் பகுதிக்கு செல்ல மூன்று மலைப்பாதைகள் உள்ள நிலையில், குப்பனூா் அடிவாரத்தில் பலத்த காற்று வீசியதால் முதல் கொண்டை ஊசி வளைவில் உள்ள மலைப்பாதையின் குறுக்கே சனிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினா், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், ஒருமணி நேரத்தில் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
தொடர்புடையது

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

