தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி கே.பழனிசாமியை கட்சி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள் சந்தித்துப் பேசிவருகின்றனா். அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினா்.
தொடா்ந்து, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கா், ஓ.எஸ்.மணியன், கரூா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் சனிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.
அப்போது, தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், வெற்றி வாய்ப்புகள் குறித்து அவா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் எடப்பாடி கே.பழனிசாமியை நிா்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

தொகுதி அறிமுகம் - எடப்பாடி!

சேலத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த வேட்பாளா்கள்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

