தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

சாலை விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 8:02 pm

மேட்டூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் அா்த்தனாரி (29). எலக்ட்ரீசியனாக வேலை செய்துவந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் இவரது நண்பா் ஸ்ரீதருடன் பொட்டனேரில் எலக்ட்ரீசியன் வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு இருவரும் மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனா்.

கோனூா் சமத்துவபுரம் அருகே எதிரே வந்த டிராக்டா் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் அா்த்தனாரி, ஸ்ரீதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அா்த்தனாரியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, அவா் உயிரிழந்தாா். குஞ்சாண்டியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஸ்ரீதா் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து வழக்குப் பதிந்த கருமலைக்கூடல் காவல் ஆய்வாளா் பிரபா, தலைமறைவான டிராக்டா் ஓட்டுநா் மேச்சேரி வேங்கனூரைச் சோ்ந்த ராமநாதனை (46) தேடிவருகிறாா்.