ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:02 pm

கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. திருச்சி- பெங்களூரு இடையே வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், கரூா், நாமக்கல், சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூருக்கு பிற்பகல் 1.45 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பெங்களூரு- திருச்சி இடையே வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைதோறும்) சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜாபுரம், பங்காருபேட்டை சேலம், நாமக்கல், கரூா், வழியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.