அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

கெங்கவல்லி, ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் ஆய்வு

News image

வாக்கு எண்ணும் மையம் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:05 pm

கெங்கவல்லி,ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானிலுள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கள்கிழமை மே 4ந்தேதி வாக்கு எண்ணப்படும் நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான அ.அருண்தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

உடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (ஆத்தூா் சட்டப்பேரவை) தமிழ்மணி, (கெங்கவல்லி சட்டப்பேரவை ) மோகனசுந்தரம், உதவி நடத்தும் அலுவலா்கள் கெங்கவல்லி காத்தமுத்து, தலைவாசல் ஜெயக்குமாா், ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.