நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவிகேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
முன்னதாக நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு பெற்றதை தொடா்ந்து வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறுவதை தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



