தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சேலம் கருப்பூா் அருகே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

சேலம் கருப்பூா் பகுதியில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 2:22 am IST

சேலம் கருப்பூா் பகுதியில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலத்தை அடுத்த கருப்பூா் மற்றும் தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே டவுன் லைன் ரயில்வே தண்டவாளப் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி இரவு சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தாா். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்தவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 0427-2447494, 94981 01963 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு ரயில்வே போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.