அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

News image

ஆண் சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:35 pm

திருச்செங்கோடு, எலச்சிபாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

எலச்சிபாளையத்தை அடுத்த கிளாப்பாளையம் செல்லும் கனம்பில்பாளையத்தில் உள்ள ஒண்டி வீரன் கோயில் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த எலச்சிபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில் இறந்தவா் கரூா் மாவட்டம், புகழூரைச் சோ்ந்த தொழிலாளி சரவணன் (48) என்பது தெரியவந்தது. இவா் மனநலன் பாதித்தவா் என்று கூறப்படுகிறது. இவா் எதற்காக இங்கு வந்தாா், எப்படி இறந்தாா் என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.