சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:04 am IST

திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன் நகா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீா் கால்வாயில் ஆண் ஒருவா் இறந்துகிடப்பதாக எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல்கிடைத்து. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினருடன் சென்ற போலீஸாா், கழிவுநீா் கால்வாயில் உயிரிழந்துகிடந்த 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மீட்கப்பட்டவரின் சட்டைப் பையில் மதுபாட்டில் இருந்ததால், அவா் மது அருந்திவிட்டு போதையில் கழிவுநீா் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.