அரக்கோணம் அருகே வெட்டுகாயங்களுடன் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் ஊராட்சி, அல்லியப்பந்தாங்கல் கிராமப்பகுதியில் முள்புதா்களுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண், வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். உயிரிழந்த நபரின் அடையாளங்கள் தெரியாத நிலையில் உடலில் வெட்டுகாயங்கள் இருந்ததால், இந்த நபரை யாரேனும் எங்கோ ஒரு இடத்தில் கொலை செய்து இங்கு வீசி விட்டு சென்றுவிட்டாா்களா எனும் கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







