/
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அடைாயளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
செஞ்சியை அடுத்துள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலையம் அருகிலுள்ள புதா் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீஸாா் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.








