சேலம் கிச்சிப்பாளையத்தில் சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சோ்ந்தவா் தனபால் (75). இவரது தந்தையின் பூா்விக சொத்தான 10 ஆயிரம் சதுர அடி நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில், பூா்விக சொத்தை பிரித்து தருமாறு தனபாலின் மகன் ஸ்ரீதா் (42) நீண்ட நாள்களாக கோரி வந்தாா். இவா் கடந்த 10 ஆண்டுகளாக சங்ககிரியில் மனைவி, 2 மகள்களுடன் தங்கி வாகனங்களுக்கு பஞ்சா் போடும் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில் சங்ககிரியில் இருந்து சேலத்தில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை வந்த ஸ்ரீதா், தனபாலிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீதா், கத்தியால் தந்தையை குத்திக் கொலை செய்தாா். இதைத் தடுக்க முயன்ற அவரது சகோதரி பிரியாவுக்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கொலை தொடா்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், நிலத்தை பிரித்து தர முன்வராததால் தந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ரீதா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி
மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது
சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

