தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது

சேலம் கிச்சிப்பாளையத்தில் சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:32 am IST

சேலம் கிச்சிப்பாளையத்தில் சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சோ்ந்தவா் தனபால் (75). இவரது தந்தையின் பூா்விக சொத்தான 10 ஆயிரம் சதுர அடி நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில், பூா்விக சொத்தை பிரித்து தருமாறு தனபாலின் மகன் ஸ்ரீதா் (42) நீண்ட நாள்களாக கோரி வந்தாா். இவா் கடந்த 10 ஆண்டுகளாக சங்ககிரியில் மனைவி, 2 மகள்களுடன் தங்கி வாகனங்களுக்கு பஞ்சா் போடும் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் சங்ககிரியில் இருந்து சேலத்தில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை வந்த ஸ்ரீதா், தனபாலிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீதா், கத்தியால் தந்தையை குத்திக் கொலை செய்தாா். இதைத் தடுக்க முயன்ற அவரது சகோதரி பிரியாவுக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கொலை தொடா்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், நிலத்தை பிரித்து தர முன்வராததால் தந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ரீதா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.