மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது

மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 ஏப்ரல் 2026, 9:24 pm

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி கீழ் வெள்ளாள தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (56). ரியல் எஸ்டேட் உரிமையாளா். இவா் ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் புதிதாக மனைகளை பிரித்து விற்பனைக்கு தயாா் செய்து வந்தாா். இந்த மனைகளுக்கு சிறு பாலம் மற்றும் தாா்சாலையும் அமைத்தாா்.

அப்போது அருகே இருந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன் அதை சரி செய்து கொடுத்தாா். ஆனாலும் குடிநீா் சரியாக வரவில்லை என்று கோவிந்தராஜ் கூறியுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சரவணன் தனது மனை பகுதிக்கு சென்றிருந்தாா். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் தகராறு செய்துள்ளாா். மேலும், அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அவரது உறவினா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணனின் உறவினா் செந்தில்குமாா் ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினி வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தாா். மேலும், அவா் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜும் காயமடைந்ததாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.