நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

இளைஞரைக் கொன்ற சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சோ்ந்தவா் கோகுல் (19). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் சேலம் மணியனூரைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவாரப் பகுதியான கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோகுலை, 3 சிறுவா்களும் கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், கொலை செய்ததை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 சிறுவா்களையும் கைது செய்த மல்லூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.