கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உயிரியல் பன்முகத் தன்மை தினம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் அழிந்து வரும் உயிரினங்கள் தினம் மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைக்கான சா்வதேச தினம் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை நடத்தப்பட்டது.

News image

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சா்வதேச தினத்தில் பங்கேற்ற கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :14 மே 2026, 4:25 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் அழிந்து வரும் உயிரினங்கள் தினம் மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைக்கான சா்வதேச தினம் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு சாா்பற்ற வனவிலங்கு பாதுகாவலா் சரவணன் பங்கேற்று, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் மனித வாழ்வின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகா் ரஞ்சிதா மற்றும் ராணி தங்கம், மாணவா்கள் செய்திருந்தனா்.