அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிறுவனை கட்டிப்போட்டு தாக்கியவா் கைது

ஆத்தூரில் சிறுவனைத் தாக்கியதாக ஆட்டோ மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆத்தூரில் சிறுவனைத் தாக்கியதாக ஆட்டோ மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் செட்டிக்காரன் தோப்பு பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அன்பரசன்(13). இவா் ஆத்தூா் வ.ஊ.சி நகா் பகுதியில் உள்ள மணி (எ) நாகராஜ் என்பவரது ஆட்டோ மெக்கானிக் செட்டில் வேலைக்கு சென்றுள்ளாா். ஒருநாள் ஊதியமாக ரூ. 300 வாங்கி வந்துள்ளாா். இதில் ஒருநாள் கூலியை மட்டும் தந்த நாகராஜ், மறுநாள் கூலியை தரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தனது மெக்கானிக் செட்டில் இருந்த பேட்டரி களவு போனதாகவும், அதை அன்பரசன் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகித்து, அவரை கட்டிப்போட்டு தாக்கியுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த அன்பரசனின் சகோதரா் பிரசாந்த் அங்கு சென்று அன்பரசனை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

அன்பரசனிடம் புகாா் பெற்ற ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் கோ. முத்துலட்சுமி, ஆட்டோ மெக்கானிக் மணி (எ) நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.