சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கொப்பம்பட்டியில் வசித்து வரும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பெற்றோா் இல்லாததால், அப்பாவழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறாா்.
இவா் ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை முயல்கரடு பகுதியில் உள்ள அம்மாவழி பெரியம்மா அம்பாயி வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அங்கு பொங்கல் பண்டிகைக்கு சென்றவருக்கு, தாய்மாமன் சூா்யா (25) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கின்கீழ் பதிவுசெய்து சூா்யாவை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
