திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதிகள் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மத்திய சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் காவலா்கள் சிறையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டாா்.
அப்போது, 20-ஆவது தொகுப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த து. நவீன்குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூ. பிரசன்னா (27), மதுரை ஜெய்ஹிந்புரத்தைச் சோ்ந்த ம. பாண்டீஸ்வரன் ஆகிய மூவரும் தங்கள் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 38 கிராம் கஞ்சாவை சிறை காவலா்கள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், கைதிகள் நவீன்குமாா், பிரசன்னா, பாண்டீஸ்வரன் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

புழல் சிறைக்குள் கைதிகள் மோதல்: 12 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

